விரைவில் தேர்தல் நடத்தப்படும்; செல்வாக்கு யாருக்கு என்பது தேர்தல் களத்தில் தெரியும்.!

258 0

மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு விடுத்துள்ள சவாலுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன உரிய முறையில் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக, இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, “பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திப் பாருங்கள். அதில் நாங்களே வெற்றி பெறுவோம்” என்று அரசுக்குச் சவால் விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பேராசிரியர் அபயரத்ன குறிப்பிட்டதாவது,
“தேர்தல்களைக் கண்டு இந்த அரசு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தடையாக இருந்த சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதிலேயே நாம் தற்போது கவனம் செலுத்தி வருகின்றோம்.

கடந்த காலங்களில் தேர்தல்களைத் தள்ளிப்போட்டவர்கள் இன்று எம்மைப் பார்த்து சவால் விடுப்பது வேடிக்கையானது. உரிய ஜனநாயக முறைப்படி, குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அன்றி, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படாத வகையில் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் செல்வாக்கு என்ன என்பது தேர்தல் களத்தில் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.” – என்றார்.

மேலும், மாகாண சபைத் தேர்தலுக்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், விரைவில் இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Post

மாகாண சபைத் தேர்தலை காலதாமதமின்றி நடத்துங்கள் – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
ஐக்கிய தேசியக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ, மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து ஆராய விசேட நாடாளுமன்றத்…

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை: காணிகள் விடுவிப்பதில் இழுபறி.!

Posted by - February 20, 2026 0
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பாக, கொழும்பில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைத் தொடங்கியபோதும், காணிகளை விடுவிப்பதில் இழுபறி தொடர்ந்து வருகிறது. ஜனாதிபதி அநுர…

பழிவாங்கும் அரசியலை விடுத்து மக்கள் நலனில் அக்கறை காட்டுக – அனுஷ பல்பிட்ட காட்டம்.!

Posted by - February 21, 2026 0
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முன்னாள் தலைவருமான அனுஷ் பல்பிட்ட, ஊழல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,…

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்.!

Posted by - February 20, 2026 0
துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது…

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச விசாரணை கோரி 3287 நாட்கள் போராட்டம்.!

Posted by - February 20, 2026 0
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (20.02.2026) காலை 10 மணியளவில் A9 வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். 2009…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *