சிறையில் அடைத்தாலும் நாமல் வெற்றியடைவார் – மொட்டுக் கட்சி சூளுரை.!

280 0

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறைக்குள் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற புதிய சரித்திரச் சாதனையை அவர் படைப்பார்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டுக் கட்சி) உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போது மக்கள் ஆதரவு மீண்டும் எமது பக்கம் திரும்புவதைக் கண்டு அஞ்சும் தரப்பினர், நாமல் ராஜபக்ஷவை அரசியல் ரீதியாக முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே அவருக்கு எதிராகச் சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

எந்தச் சவாலையும் எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். நாமல் ராஜபக்ஷவை சிறையில் அடைத்தாலும், நாம் வெளியில் இருந்து அவருக்காகத் தீவிரமாகச் செயற்படுவோம். ஒருவேளை ஜனாதிபதித் தேர்தல் நடக்கும்போது அவர் சிறையில் இருந்தாலும், மக்கள் ஆதரவுடன் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். இதன் மூலம் சிறையில் இருந்து ஜனாதிபதித் தேர்தலை வென்றவர் என்ற பெருமையை அவர் வரலாற்றில் பதிவு செய்வார்.” – என்றார்.

Related Post

இலங்கையில் பூனைகளிடமிருந்து பரவும் ரேபிஸ் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Posted by - February 19, 2026 0
இலங்கையில் பூனைகளிடமிருந்து ரேபிஸ் பரவுதல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர் ஆலோசகர், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் அதுல லியனபதிரன ரேபிஸ்…

சர்வதேச தாய்மொழி தினம்: மட்டக்களப்பில் அனைத்தின மக்களின் உணவு கண்காட்சி.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்புவில் இன்று (21) சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சி நடைபெற்றது.“உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல்” என்ற…

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; இளைஞன் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
அனுராதபுரம், ஹரிகஸ்வெவ – கலங்குட்டிய கால்வாய் அருகே இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 26…

விசாரணைக்கு வருவதற்கு ரணிலின் மனைவி மறுப்பு; உடல்நிலையைக் காரணம் காட்டி சி.ஐ.டிக்கு கடிதம்.!

Posted by - February 20, 2026 0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராக முடியாது என அறிவித்துள்ளார்.…

கவிதை நூல் வெளியீட்டு விழா.!

Posted by - February 20, 2026 0
மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் முன்னாள் மாணவி செல்வி ஜே.ஜஸ்வரியாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 20.02.2026.காலை 10…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *