சீன தொழிலதிபருடன் இரகசியமாக சந்தித்ததாக குற்றச்சாட்டுகளில், பெருவின் இடைக்கால ஜனாதிபதி ஜோஸ் ஜெரி பதவியேற்ற நான்கே மாதங்களில் பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெரி இரவு நேரத்தில் சீன தொழிலதிபர் ஜிஹுவா யாங்கை சந்தித்தது தொடர்பான விடியோ வெளியானது, இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
பெரு பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக 75 வாக்குகள், ஆதரவாக 24 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஜெரி பதவியை இழந்தார்.கடந்த ஒக்டோபரில், ஊழல் புகாரால் முன்னாள் ஜனாதிபதி தினா போலுவார்டே பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்றத் தலைவராக இருந்த ஜெரி இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
வரும் ஏப்ரிலில் பெருவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பாராளுமன்றத் தலைவர் ஃபெர்னாண்டோ ரோஸ்பிக்லியோசி இடைக்கால ஜனாதிபதி பதவியை ஏற்க மறுத்துள்ள நிலையில், பாராளுமன்றம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும், அவர் நாட்டின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் இது கடந்த எட்டு ஆண்டுகளில் நிகழ்ந்த எட்டாவது ஆட்சி மாற்றம். இதுபோதும் அரசியல் சீர்திருத்தம் இல்லாமையினாலும், நாட்டின் பொருளாதாரம் 3.4 சதவீத வளர்ச்சியில் நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
