கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

98 0

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த 15 பேர் கொண்ட குழு, லேக் தாஹோ அருகிலுள்ள சியரா நெவாடா பகுதியில் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.

கடந்த 17ம் திகதி, கேஸ்டில் பீக் பகுதியில் திடீரென வீசிய புயலால் பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் குழுவினரின் அனைவரும் சிக்கிக்கொண்டனர்.உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீட்புக் குழு, 6 பேரை உயிருடன் மீட்டது.

ஆனால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காணாமல் போய், அவரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.நெவாடா கவுண்டிமேயர் ஷானன் மூன் கூறுகையில், “1981ம் ஆண்டு மவுண்ட் ரெய்னியரில் 11 பேர் உயிரிழந்த பனிச்சரிவுக்கு பிறகு, அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாக இது அமைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான பனிச்சரிவாக இது கருதப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Related Post

ஈரான் விவகாரம் தீவிரம்: பிரித்தானியத் தளங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.!

Posted by - February 20, 2026 0
ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரசின் சாகோஸ் தீவுகள் தொடர்பான…

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

Posted by - February 16, 2026 0
லண்டனின் (Croydon) குரோய்டன் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று அதிகாலையில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இருபது…

இந்தியா – பாகிஸ்தான் மோதலைத் தணிப்பதற்கு ட்ரம்ப் வலியுறுத்தல்.!

Posted by - February 20, 2026 0
2025 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற…

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

Posted by - February 20, 2026 0
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக 33 பேர் கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் படை பணியமர்த்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து…

பாகிஸ்தானின் கராச்சியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு.!

Posted by - February 20, 2026 0
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் நேற்று இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரமழான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *