அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த 15 பேர் கொண்ட குழு, லேக் தாஹோ அருகிலுள்ள சியரா நெவாடா பகுதியில் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.
கடந்த 17ம் திகதி, கேஸ்டில் பீக் பகுதியில் திடீரென வீசிய புயலால் பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் குழுவினரின் அனைவரும் சிக்கிக்கொண்டனர்.உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீட்புக் குழு, 6 பேரை உயிருடன் மீட்டது.
ஆனால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காணாமல் போய், அவரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.நெவாடா கவுண்டிமேயர் ஷானன் மூன் கூறுகையில், “1981ம் ஆண்டு மவுண்ட் ரெய்னியரில் 11 பேர் உயிரிழந்த பனிச்சரிவுக்கு பிறகு, அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாக இது அமைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான பனிச்சரிவாக இது கருதப்படுகிறது” என்று தெரிவித்தார்.
