போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் கொ*லை- மெக்சிகோவில் கலவரம்.!

249 0

மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் நபரான ‘ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் நெமேசியோ ஒஸ்குவேரா செர்வான்டெஸ் (எல் மெஞ்சோ), இராணுவத்தின் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

15 மில்லியன் டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த, எல் மெஞ்சோ கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அங்குள்ள தனது நாட்டுப் பிரஜைகளை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.ஜலிஸ்கோ மாநிலத்தின் மத்திய-மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.

எனினும் இந்த தகவலை , மெக்சிகோ அரசாங்கம் இதனை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.சம்பவத்தை தொடர்ந்து ஜலிஸ்கோ உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய நபர்களின் நடமாட்டம் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஜலிஸ்கோவை மையமாகக் கொண்ட இந்த போதைப்பொருள் கும்பல் தற்போது மெக்சிகோ நாடு முழுவதும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

ஈரான் தொடர்பில் ட்ரம்ப் இறுதி முடிவு விரைவில்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படை குவிப்பு தீவிரம்.!

Posted by - February 19, 2026 0
ரொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் நடவடிக்கையைத்…

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கொடுத்துக் கொலை

Posted by - February 16, 2026 0
ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி ,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு ‘தவளை விஷமே’ காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட…

கிரீன்லாந்து விவகாரம் தீவிரம்: அமெரிக்க கருத்துக்கிடையில் டென்மார்க் மன்னர் பயணம்.!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அந்தத் தீவு மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் டென்மார்க் மன்னர்…

இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த முன்னாள் கேப்டன்கள் !

Posted by - February 19, 2026 0
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

மத்திய கிழக்கில் பதற்றம்: ஜேர்மன் படைகள் எர்பில் நகரிலிருந்து தற்காலிக விலகல்.!

Posted by - February 20, 2026 0
மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான பதற்றம் அதிகரிப்பதால், ஜேர்மனி தனது படைகளின் அளவைக் குறைக்கும் முடிவெடுத்துள்ளது. குர்திஸ்தான் பகுதியிலுள்ள ஈராக்கின் தலைநகரான எர்பில் நகரில் ஜேர்மன் ராணுவம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *