போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் கொ*லை- மெக்சிகோவில் கலவரம்.!

314 0

மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் நபரான ‘ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் நெமேசியோ ஒஸ்குவேரா செர்வான்டெஸ் (எல் மெஞ்சோ), இராணுவத்தின் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

15 மில்லியன் டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த, எல் மெஞ்சோ கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அங்குள்ள தனது நாட்டுப் பிரஜைகளை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.ஜலிஸ்கோ மாநிலத்தின் மத்திய-மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.

எனினும் இந்த தகவலை , மெக்சிகோ அரசாங்கம் இதனை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.சம்பவத்தை தொடர்ந்து ஜலிஸ்கோ உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய நபர்களின் நடமாட்டம் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஜலிஸ்கோவை மையமாகக் கொண்ட இந்த போதைப்பொருள் கும்பல் தற்போது மெக்சிகோ நாடு முழுவதும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கொடுத்துக் கொலை

Posted by - February 16, 2026 0
ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி ,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு ‘தவளை விஷமே’ காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட…

கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த…

மலேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

Posted by - February 23, 2026 0
மலேசியாவின் சபா மாநிலக் கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட…

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து .!

Posted by - February 23, 2026 0
நேபாளத்தில் போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.நேபாளத்தில் இன்று (23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை…

ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

Posted by - February 19, 2026 0
அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு செலவுகள் மற்றும் பொருளாதாரம் குறித்த அவநம்பிக்கை காரணமாக ஊழியர்களின் பணி நேரத்தையும் வேலைகளையும் குறைக்க இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலான பெரிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *