இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் விடயம்: சுயாதீன சர்வதேச விசாரணை கோரிக்கை – யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தல்.!

327 0

வடமராட்சி ஊடக இல்லம், ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயத்தில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
சு. இராமச்சந்திரன், 15.02.2007 அன்று துன்னாலை கலிகை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதன் 19ஆவது ஆண்டு நினைவாக, இன்று (21) காலை பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் போது மகஜரும் வாசிக்கப்பட்டது.


அந்த மகஜரில், இராணுவத்தினரும் அக்காலத்தில் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக் குழுக்களும் இணைந்து இடம்பெற்ற கைது மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு இதுவரை உரிய நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பரணகம ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகளில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும்இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இராமச்சந்திரன் கைது செய்யப்பட்ட பின்னர் சில நாட்கள் தொலைபேசி மூலம் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும், தாம் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரது பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரே சாட்சியாக சகோதரி மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2004–2010 காலகட்டத்தில் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளனர் எனவும், தமிழ் ஊடக நிறுவனங்கள் மீது பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், மீதமுள்ள சாட்சிகள் மௌனமாகுமுன், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் சுயாதீன சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மகஜரின் பிரதிகள் ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுக்கும் அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

தங்க விலையில் மாற்றமில்லை: நகையக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.!

Posted by - February 20, 2026 0
உள்நாட்டுச் சந்தையில் இன்று தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24…

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
கொழும்பு மாவட்டத்தின் கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்கிஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப்…

கவிதை நூல் வெளியீட்டு விழா.!

Posted by - February 20, 2026 0
மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் முன்னாள் மாணவி செல்வி ஜே.ஜஸ்வரியாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 20.02.2026.காலை 10…

கரைத்துரைப்பற்று பிரதேச சபை தொடர்பில் தமிழரசுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!

Posted by - February 19, 2026 0
முல்லைத்தீவு மாவட்டம், கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை நீக்கி, அதற்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தடுக்கக்…

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

Posted by - February 21, 2026 0
இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று முதல் நாளை (22) முற்பகல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *