2025 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற அமைதி வாரியக் கூட்டத்தில் பேசிய அவர், தனது வரி அச்சுறுத்தல்தான் இரண்டு நாடுகளின் மோதல் அதிகரிப்பதைத் தடுத்ததாகவும் கூறினார்.
மேலும், அணு ஆயுதம் ஏந்திய இரண்டு அண்டை நாடுகளும் மோதலை நிறுத்தாவிட்டால் 200 சதவீத வரிகளை விதிக்கப் போவதாகவும் அவர் எச்சரித்தார். மோதலின் போது, மிகவும் விலையுயர்ந்த 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ட்ரம்ப் கடந்த காலங்களில் இந்தியா–பாகிஸ்தான் மோதலைத் தணிப்பதில் தனது செல்வாக்கை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறி வருகிறார். இருப்பினும், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இராணுவ மோதலின் போது, மூன்றாம் தரப்பு தலையீடு அல்லது விமான இழப்பு தொடர்பான அனைத்து கூற்றுகளையும் இந்தியா மறுத்துள்ளது.
