மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய விஜித தலைமையில் விசேட குழு நியமனம்.!

277 0

நீண்டகாலமாக இழுபறியாக இருந்து வரும் மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடிய நாடாளுமன்ற அமர்வில், குறித்த தெரிவுக்குழுவின் உறுப்பினர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.


அந்த தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதி அமைச்சர்களான முனீர் முலபர், சுனில் வட்டகல, அருண் ஹேமசந்திரா ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், லக்ஷ்மன் நிபுனராச்சி ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இரா. சாணக்கியன், சமன்மலி குணசிங்க, தர்மபிரிய விஜேசிங்க, சந்தன சூரியாராச்சி, நிஷாம் காரியப்பர் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் நிலவும் அரசியல் மற்றும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே இத்தெரிவுக்குழுவின் பிரதான நோக்கமாகும். குறித்த குழு தனது அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

நுவரெலியா ,ஹட்டன் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு

Posted by - February 16, 2026 0
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று  தெரிவித்திருந்தனர். இதற்கு…

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து அறிவிப்பு

Posted by - February 16, 2026 0
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ்.…

ஹெரோயின், மின்னணு தராசுடன் போதைப்பொருள் வியாபாரி கைது.!

Posted by - February 21, 2026 0
களுத்துறை மாவட்டத்தில், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக…

விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு – ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

Posted by - February 20, 2026 0
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி,…

இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் விடயம்: சுயாதீன சர்வதேச விசாரணை கோரிக்கை – யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தல்.!

Posted by - February 21, 2026 0
வடமராட்சி ஊடக இல்லம், ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயத்தில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *