சிறையில் அடைத்தாலும் நாமல் வெற்றியடைவார் – மொட்டுக் கட்சி சூளுரை.!

281 0

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறைக்குள் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற புதிய சரித்திரச் சாதனையை அவர் படைப்பார்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டுக் கட்சி) உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போது மக்கள் ஆதரவு மீண்டும் எமது பக்கம் திரும்புவதைக் கண்டு அஞ்சும் தரப்பினர், நாமல் ராஜபக்ஷவை அரசியல் ரீதியாக முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே அவருக்கு எதிராகச் சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

எந்தச் சவாலையும் எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். நாமல் ராஜபக்ஷவை சிறையில் அடைத்தாலும், நாம் வெளியில் இருந்து அவருக்காகத் தீவிரமாகச் செயற்படுவோம். ஒருவேளை ஜனாதிபதித் தேர்தல் நடக்கும்போது அவர் சிறையில் இருந்தாலும், மக்கள் ஆதரவுடன் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். இதன் மூலம் சிறையில் இருந்து ஜனாதிபதித் தேர்தலை வென்றவர் என்ற பெருமையை அவர் வரலாற்றில் பதிவு செய்வார்.” – என்றார்.

Related Post

மூலோபாய முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகை!

Posted by - February 16, 2026 0
சுற்றுலா, உற்பத்தி மற்றும் வேளாண் துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நிதி, பொருளாதார…

அக்குரேகொட படுகொ*லை விவகாரம் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து…

கரைத்துரைப்பற்று பிரதேச சபை தொடர்பில் தமிழரசுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!

Posted by - February 19, 2026 0
முல்லைத்தீவு மாவட்டம், கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை நீக்கி, அதற்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தடுக்கக்…

சிறப்பாக நடைபெற்ற உணவுத் திருவிழா.!

Posted by - February 19, 2026 0
IMHO இன் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (18) PMD கலாச்சார மண்டபத்தில் “உணவுத் திருவிழா” மிகவும் சிறப்பாக நடைபெற்றது. “உணவே மருந்து”என்பதற்கிணங்க உடலுக்கு தேவையான போசணையான உணவுகளை…

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் தப்பியோட்டம்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்.!

Posted by - February 20, 2026 0
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கல்கிசை பொலிஸ் தலைமையகத்தின் காவலில் இருந்தபோது பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *