ஊழல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது.!

233 0

“நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால் அங்கிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என மொட்டுக் கட்சி கூறுவது வேடிக்கையானது. அவர் சிறைக்குச் செல்வது தேர்தல் வெற்றிக்காக அல்ல, கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட ஊழல் மற்றும் குற்றங்களுக்காகவே.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

மொட்டுக் கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் ஊடகங்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது,
“யாரையும் அரசியல் பழிவாங்கலுக்காகச் சிறையில் அடைக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. ஆனால், மக்கள் பணத்தைத் திருடியவர்கள் மற்றும் அரச அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.

சிறையில் இருந்து கொண்டு தேர்தலில் வெல்லலாம் என்பது பழைய காலத்துக் கற்பனை. நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிரான தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர். குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதே எமது நோக்கம். அதைத் திசைதிருப்ப இவ்வாறான கருத்துக்களை மொட்டுக் கட்சியினர் முன்வைத்து வருகின்றனர்.

நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால், அது அவர் செய்த செயல்களுக்கான அறுவடையே தவிர, தேர்தல் வியூகம் அல்ல.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

Related Post

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச விசாரணை கோரி 3287 நாட்கள் போராட்டம்.!

Posted by - February 20, 2026 0
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (20.02.2026) காலை 10 மணியளவில் A9 வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். 2009…

இந்தியப் பிரதமரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி.!

Posted by - February 20, 2026 0
புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (20) நண்பகல் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் சந்தித்தார். AI Impact 2026 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக…

கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

தளவாய் பகுதியில் கழிவுகள் கொட்டும் மர்ம நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – நிலாந்தன் அறிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
ஏறாவூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் கழிவு மூட்டைகள், தளவாய் பகுதியில் உள்ள ஆலயங்கள், பிரதான வீதிகள் மற்றும் மக்கள் வாழும் இடங்களில் வீசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது

Posted by - February 16, 2026 0
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15) இன்றும் (16)…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *