வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; இளைஞன் உயிரிழப்பு.!

303 0

அனுராதபுரம், ஹரிகஸ்வெவ – கலங்குட்டிய கால்வாய் அருகே இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கலங்குட்டிய கால்வாய் வீதியில் நேற்று பயணித்துக்கொண்டிருந்த உழவு இயந்திரம், எதிர்பாராத விதமாக வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திய ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹரிகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

Posted by - February 21, 2026 0
இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று முதல் நாளை (22) முற்பகல்…

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்!

Posted by - February 16, 2026 0
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் சட்டத்தின் ஆட்சிக்கும் இலங்கையின்…

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

Posted by - February 20, 2026 0
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.…

காதல் முரண்பாட்டால் காதலி தூக்கிட்டு உயிர்மாய்ப்பு.!

Posted by - February 21, 2026 0
அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த யுவதிக்கும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27…

மாகாண சபை தேர்தல் குறித்து ஆராய விசேட குழு நியமனம்

Posted by - February 20, 2026 0
நீண்ட காலமாக இழுபறியிலுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குரிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *