மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான பதற்றம் அதிகரிப்பதால், ஜேர்மனி தனது படைகளின் அளவைக் குறைக்கும் முடிவெடுத்துள்ளது. குர்திஸ்தான் பகுதியிலுள்ள ஈராக்கின் தலைநகரான எர்பில் நகரில் ஜேர்மன் ராணுவம் முகாமிட்டு வந்திருந்தது. உள்ளூர் படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக அங்கு ஜேர்மன் வீரர்கள் பணியாற்றியுள்ளனர்.
இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தினால், எர்பில் முகாமிட்ட சில ஜேர்மன் படைகள் தற்காலிகமாக அங்கிருந்து விலக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பாலான வீரர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, முகாமின் செயல்பாட்டுக்குத் தேவையானோர் மட்டுமே எர்பில் தங்கியுள்ளனர் என்று ஜேர்மன் பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
