தேமுதிக கட்சி நேற்று (19) அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.
முதல்வரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளோம். இந்தக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும். 2016-ல் இது அமைந்திருக்க வேண்டியது, பழம் நழுவி பாலில் விழும் என கருணாநிதி கூறியதைப்போல் இப்போது அது நிகழ்ந்திருக்கிறது” என கூறினார்.
விஜய்காந்த் உருவாக்கிய தேமுதிக கட்சி முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி என, பிரேமலதாவையும் கட்சி நிர்வாகிகளையும் வரவேற்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.
