ஜேர்மனியில் புகலிட கோரிக்கை யாளர்களுக்கு வேலை வாய்ப்பு- புதிய திட்டம் அறிவிப்பு.!

241 0

ஜேர்மனி அரசு, நாட்டில் புகலிடம் கோரும் புலம்பெயர் மக்கள் விரைவில் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், புலம்பெயர் மக்கள் ஜேர்மனிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுவரை, புலம்பெயர்ந்தோர் வேலை பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. புதிய திட்டத்தின் மூலம், அவர்கள் புகலிடம் தொடர்பான விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் இருந்தாலும் வேலை செய்ய முடியும்.இங்கு வரும் அனைவரும் விரைவில் வேலை செய்ய வேண்டும். வேலை வாய்ப்பே சிறந்த ஒருங்கிணைப்பு வழி,” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் சம்பாதிக்கும் வருமானம், அவர்கள் பெறும் சமூக நலன்களுடன் சமநிலைப்படுத்தப்படும். ஆனால் தவறான தகவல் வழங்குபவர்கள் அல்லது அதிகாரிகளுடன் ஒத்துழைக்காதவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படமாட்டார்கள்.

இந்த மாற்றம், ஜேர்மனியில் வேலைவாய்ப்பு சந்தையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதேசமயம், சமூகத்தில் புலம்பெயர்ந்தோர் விரைவில் இணைந்து வாழ உதவும்.சமூகத்தில் ஒருங்கிணைப்பு, வேலை வாய்ப்பின் மூலம் எளிதாகும் என அரசு நம்புகிறது. இந்த திட்டம், ஜேர்மனியின் குடியேற்றக் கொள்கையில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Related Post

கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த…

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

Posted by - February 19, 2026 0
இராணுவச் சட்டத்தை திணிக்க முயற்சித்தன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை…

நியூயார்க் நகரத்தைத் தாக்கிய பனிப்புயல்.!

Posted by - February 23, 2026 0
அமெரிக்கா- நியூயார்க் நகரத்தைத் தாக்கிய கடுமையான பனிப்புயல் காரணமாக, நேற்று இரவு முதல் நகரம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி நகரத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகள்…

கிறிஸ்மஸுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவரின் உடல் ஏர் ஆற்றில் (River Ayr) கண்டெடுப்பு!

Posted by - February 16, 2026 0
கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்.!

Posted by - February 19, 2026 0
இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) கீழ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவனம், மார்சேய் ஃபோஸ் துறைமுகம் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. பிரெஞ்சு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *